முகப்பு
ஈரோடு

தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தாளவாடி வட்டாரத்தில் உள்ள மரூர் கிராமத்தில் உள்ள பால் குளிரக வளாகத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல்  கண்டறியப்பட்டது. இதுகுறித்து, தொல்பொருள் ஆர்வலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஈரோடு சக்தி பிரகாஷ், ஓமலூர் சீனிவாசன் ஆகியோர்  மரூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு நிலையாக அமைந்துள்ள நடுகல்லில் 3 வீரர்கள் போர் புரிவது போலவும், இரண்டாம் நிலைக் கற்களில் இறந்த வீரர்களை தேவகன்னிகள் அழைத்துச் செல்வது போலவும் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள தொல்லியல் மேடுகளை அகழாய்வு செய்தால் பல தொன்மையான தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →