சென்னிமலை பேரூராட்சிப் பகுதியில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட அருணாகிரிநாதர் வீதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி சனிக்கிழமை நடைபெற்றது. சென்னிமலை செயல் அலுவலர் கிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர் ஹக்கீம் சேட் ஆகியோர் மேற்பார்வையில்
பணியாளர்கள் வீடுவீடாக ஆய்வு செய்தனர். பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றினர். மேலும், சுற்றுப்புறப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.