ஈரோடு

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு, ரயில்வே காலனியில் உள்ள ரயில்வே மருத்துவமனை வளாகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் களியபெருமாள், கோட்டத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், தண்டவாள பராமரிப்புப் பணியாளர்கள் (டிராக்மேன்) உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு பதவி உயர்வு வழங்கியவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பராமரிப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT