முகப்பு
ஈரோடு

மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம்

மொடக்குறிச்சியை அடுத்த வேங்கியாம்பாளையத்தில் பசுமை விழுதுகள் இயக்கம் சார்பில் மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மொடக்குறிச்சியை அடுத்த வேங்கியாம்பாளையத்தில் பசுமை விழுதுகள் இயக்கம் சார்பில் மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 
கருத்தரங்குக்கு, பசுமை விழுதுகள் ஒருங்கிணைப்பாளர் செந்தில் பிரகாஷ் தலைமை வகித்தார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக கெளரவ வன உயிரின பாதுகாவலர் பேராசிரியர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
கருத்தரங்கில், வன விலங்குகள் பாதுகாப்பு, காடுகள் வளர்ப்பு, காட்டு வழி நடைபயணம், புதிய அணைகள் கட்டுவதில் உள்ள நன்மை, தீமைகள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகள், நீர் வழி பாதுகாப்பு, மூலிகை பயன்பாடுகள், மரம் வளர்ப்பு நன்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  இதில், காலிங்கராயன் பாசன சபை, பசுமை கிளாம்பாடி இயக்கம் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →