முகப்பு
ஈரோடு

மலைவாழ் இளைஞர் சங்க மாநிலக் குழுக் கூட்டம்

தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம் (டிஒய்எப்ஐ) சார்பில் மாநிலக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம் (டிஒய்எப்ஐ) சார்பில் மாநிலக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோட்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சடையலிங்கம் தலைமை வகித்தார். 
மாநில செயலாளர் என்.பிரவீன்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் பாலா, மாவட்ட செயலாளர்கள் கோவை கனகராஜ், நாமக்கல் கோவிந்தராஜ், ஈரோடு சகாதேவன், மாநில குழு நிர்வாகிகள் பார்திபன், விக்னேஷ், வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஆந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பழங்குடி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் தாகுதல்கள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். தமிழக பழங்குடி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். 
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 7-ஆம் தேதி சேலத்தில் மண்டல அளவில் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
 

முழு கட்டுரையைப் படிக்க →