சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டக் கொடியேற்றம்
சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டக் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டக் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கணபதி ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, யாக சாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, உற்சவமூர்த்திகளுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்பட பல்வேறு வகையான திரவியங்களுடன் அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவையொட்டி, வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து, பகல் 12.30 மணியளவில் கோயிலின் முன்பு உள்ள கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களின் "அரோகரா' கோஷத்துடன் சேவல் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பங்குனி உத்திர தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து, வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தவுள்ளனர். மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.