நலவாரிய அலுவலகத்தில் மே 29 முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம்: ஏஐடியூசி தொழிற்சங்கம் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 29-முதல் நல வாரிய அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 29-முதல் நல வாரிய அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஈரோட்டில் மாவட்ட துணைத் தலைவர் மா.நாகப்பன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம், விபத்து மரண இழப்பீடு, இயற்கை மரண உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோப்புகள் ஆண்டுக் கணக்கில் தீர்வு காணப்படாமல் உள்ளன. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்த நுôற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆண்டுக் கணக்கில், ஓய்வூதியம் பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். அவர்களது வாரிசுகளுக்கு வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதியமும் முறையாக வழங்கப்படவில்லை. இதைத் தவிர, அற்ப காரணங்களுக்காக பல விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர். இதுபோன்ற அவல நிலையைக் கண்டித்தும்,விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உரிய தீர்வு கிடைக்கவும், நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மே 29-ஆம் தேதி முதல் நல வாரிய அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்பு (வீடு திரும்பாத) போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டச் செயலர் எஸ்.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலர்கள் ராஜேஷ், எஸ்.ராஜ்குமார், கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.