முகப்பு
ஈரோடு

வாகனம் மோதி ஓட்டுநர் சாவு

சத்தியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 22 மே, 2018 at 12:57 AM
பகிர்:

சத்தியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
சத்தியமங்கலத்தை அடுத்த நேரு நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (36), ஓட்டுநர். இவர், மைசூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராமசாமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.