ஈரோடு

கிராம அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

கோபிசெட்டிபாளையம் தலைமை தபால் நிலையம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 5ஆம் நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
அஞ்சல் கூட்டுக் குழு சங்கத்தின் சார்பில் 7ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், சந்திரா கமிட்டியை அமல்படுத்தக் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி வட்டத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதில் கோபி மற்றும் நம்பியூர் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT