கோபிசெட்டிபாளையம் தலைமை தபால் நிலையம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 5ஆம் நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
அஞ்சல் கூட்டுக் குழு சங்கத்தின் சார்பில் 7ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், சந்திரா கமிட்டியை அமல்படுத்தக் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி வட்டத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதில் கோபி மற்றும் நம்பியூர் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.