ஈரோடு

தனியார் கிடங்கில் தீ:  புகை பரவியதால் மக்கள் அவதி

DIN

ஈரோடு அருகே உள்ள தனியார் கிடங்கில் நேரிட்ட தீ விபத்தின் காரணமாக கரும்புகை பரவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஈரோடு, வெண்டிபாளையம், கோணவாய்க்கால் பகுதியில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான பழைய  எண்ணெயை மறுசுழற்சி செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது. 
இந்த ஆலையின் கிடங்கில்  பழைய ஆயில் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் ஆயில் கிடங்கில்  திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர், 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட ஆயில் பேரல்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. விபத்தால் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு  கரும்புகை பரவியதால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட சிரமப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT