முகப்பு
ஈரோடு

கஞ்சா விற்ற இளைஞர்கள் 3 பேர் கைது

பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:05 AM
பகிர்:

பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை, சென்னிமலை சாலை, பணிக்கம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பதாக  போலீஸாருக்கு  ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், போலீஸார் அங்கு சென்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். 
 விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் அலி (30) என்பதும்,  பணிக்கம்பாளையத்தில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர். 
இதேபோல, பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்ற மேற்கு வங்க மாநில இளைஞர் ஆயினூர் (30) என்பவரையும், பணிக்கம்பாளையம் கூட்டுறவு வங்கி அருகே கஞ்சா விற்ற மேற்கு வங்க மாநில இளைஞர் ஷோசரப்காஜு (33) என்பவரையும் கைது செய்தனர்.
 கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் தலா 500 கிராம் கஞ்சா என மொத்தம் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.