பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் கவர்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் கவர்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி சார்பில், பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யும் பொருட்டு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்கள், பம்ப் மெக்கானிக், சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வியாபாரிகளிடம் இருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.