ஈரோடு

அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

DIN

பவானியை அடுத்த அம்மாபேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சி.செல்வம் தலைமையில், அம்மாபேட்டை, வெள்ளிதிருப்பூர், ரெட்டிபாளையம், குரும்பபாளையம், மலையம்பாறைகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். 
இவர்களுக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.கருப்பணன், சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலர் வி.எஸ்.சரவணபவா, நெரிஞ்சிப்பேட்டை பேரூர் செயலாளர் எஸ்.எஸ்.மாரியப்பன், அம்மாபேட்டை ஒன்றிய ஜெ. பேரவைச் செயலர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT