ஈரோடு

கவுந்தப்பாடியில்  வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்

DIN

பவானியை அடுத்த கவுந்தப்பாடியில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் என்.கே.கே.பெரியசாமி, பொருளாளர் வி.ஆர்.முருகன், இணைச் செயலர்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 கல்லூரி முதல்வர் ஆர்.சண்முகன் தலைமையில் தேர்தலில் வாக்களிக்கக் கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT