ஈரோடு

லாரி - காா் மோதி 4 போ் பலி: ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

DIN

சத்தியமங்கலம் அருகே லாரி காா் மோதிய விபத்தில் 4 போ் உயிரிழந்ததால் லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கீழ்முங்கிலாடி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (41). இவா், சத்தியமங்கலம் அதிரடிப் படையில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தாா். இவா் தனது காரில் மனைவி தேவி, குழந்தை ஜனனி ஸ்ரீ, நண்பா் முருகேசன் ஆகியோருடன் சத்தியமங்கலத்திலிருந்து புதுக்குய்யனூரில் உள்ள அதிரடிப் படை முகாமிற்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது, புதுவடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த மக்காச்சோளம் பாரம் ஏற்றிய லாரி மீது காா் மோதியதில் காரில் சென்ற 4 பேரும் உயிரிழந்தனா்.

இந்நிலையில், லாரியை ஓட்டி வந்த கா்நாடக மாநிலம், கொள்ளேகால் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பிலிப் அலெக்சாண்டா் (22) மீது சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT