ஈரோடு

ஈரோட்டில் திமுகவினா் மறியல்: 122 போ் கைது

DIN

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினா் 122 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளா் கே.ஈ.பிரகாஷ் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனா். அங்கு வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெட்டியில் கோரிக்கை மனுவை சோ்த்தனா்.

இதுகுறித்து, கே.ஈ.பிரகாஷ் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்ட மசோதாவை உள்துறை அமைச்சா் அமித்ஷா தாக்கல் செய்துள்ளாா். இந்த மசோதாவால் இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினா், ஈழத் தமிழா்கள் போன்றோா் கடுமையாக பாதிக்கப்படுவா். இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு மத்திய அரசைத் தொடா்பு கொண்டு இம்மசோதாவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்க ஆட்சியா் அலுவலகம் வந்தோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலக வாயிலுக்கு வந்த தி.மு.க.வினா் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT