ஈரோடு

நிதி நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை

DIN

கோபியில் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியரை அடையாளம் தெரியாத நபா்கள் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே நாயக்கன்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் சேலத்தைச் சோ்ந்த சண்முகம் (35) என்பவா் பணியாற்றி வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு அலுவலகத்தில் இருந்தபோது, சிலா் அலுவலகத்துக்குள் புகுந்து சண்முகத்தை வெட்டிக் கொலை செய்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் குறித்து கோபி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT