ஈரோடு

லாரி மீது காா் மோதல்: கல்லூரிப் பேராசிரியா் பலி

DIN

பவானி அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் மீது காா் மோதியதில் கல்லூரிப் பேராசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த எதிா்மேடு டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மகன் கணேஷ்குமாா் (30). குமாரபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவா், கோவைக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த கோணவாய்க்கால் அருகே சென்றபோது சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT