ஈரோடு

பன்னிரு திருமுறை முற்றோதல்

DIN

திருமுறை திருக்காவனம் சிவனடியார் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம் சார்பில் ஞாலம் அளந்த பன்னிரு திருமுறை முற்றோதல் இன்னிசைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 விழாவில் அரிகர தேசிக சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். சிவனடியார்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஓதுவார் மூர்த்திகளும் விழாவில் பங்கேற்று 63 நாயன்மார்களில் முதன்மையான நால்வர்களான, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய பன்னிரு திருமுறை பாடல்களைப் பாடி அதற்கான விளக்கம் அளித்தனர். மாதம் ஒரு முறை நடக்கும் இந்த ஆன்மிக நிகழ்வில் ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள், சிவ பக்தர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.            

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT