ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை (பிப்ரவரி 20) மெகா மேளா நடைபெறவுள்ளது.
இது குறித்து ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொலைத்தொடர்பு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பிஎஸ்என்எல் அலுவலகங்கள், நேரடி முகமைகளில் நடைபெறும் இந்த மெகாமேளாவில், புதிய 4ஜி அலைவரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நேசம் கோல்டு, மினிட்-செகன்ட் போன்றவற்றில் இணையலாம்.
பிற நிறுவன இணைப்புகளில் இருந்து எண்ணை மாற்றாமல் எம்.என்.பி. மூலம் பிஎஸ்என்எல் இணைப்புக்கு மாறலாம்.