ஈரோடு

தாளவாடி அருகே தேங்காய் நார் உரிக்கும் ஆலையில் தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதம்

DIN

தாளவாடி அருகே தேங்காய் நார் உரிக்கும் ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதி அண்ணாநகரில், இளங்கோவன் என்பவருக்குச் சொந்தமான தேங்காய் மட்டை உரித்து நார் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வியாழக்கிழமை 30க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தபோது, ஆலையில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியது.
இது குறித்து ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் பழுதானதால், தொழிலாளர்கள் கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஆலை இருப்பதால் தீ மேலும் பரவாமல் இருக்க அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் நார் தயாரிக்கும் 10க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மற்றும் தேங்காய் நார் பொருள்கள் சேதமடைந்ததாகவும் 
இதன் மதிப்பு ரூ.50 லட்சம் எனக்  கூறப்படுகிறது. தீ கொளுந்து விட்டு எரிவதால் 2 கி.மீ. தூரம் வரை புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு கரும்புகையால் மூச்சுத் திணறல்ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT