ஈரோடு

கடம்பூர் மல்லியம்மன் கோயில் விழா

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மல்லியம்மன் கோயில் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.   
 காணும் பொங்கலையொட்டி கடம்பூர் செல்லும் வழியில் மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள மல்லியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பூப்பறிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டு நடைபெற்ற விழாவுக்கு,  சத்தியமங்கலம், வடக்குபேட்டை, கடம்பூர்,அத்தியூர், கரளியம், காடகநல்லி, கானக்குந்தூர், குன்றி, மாக்கம்பாளையம், கோட்டமாளம்,திங்களூர், சுஜ்ஜில்கரை,  பவளக்குட்டை, மல்லியம்மன்துருவம், காடட்டி, இருட்டிபாளையம், அணைக்கரை, எக்கத்தூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து பொதுமக்கள் குடும்பம்குடும்பமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும், கால்நடையாகவும் வந்து மல்லியம்மனை தரிசனம் செய்தனர்.  இந்நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
 விழாவையொட்டி, கடம்பூர் போலீஸார், வனத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 பேருந்து வசதியில்லாததால் பெரும்பாலான பக்தர்கள் வாடகை வேனில் வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT