ஈரோடு

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி

DIN

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் அரசு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாஸ்கர் பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வெங்கிடு முன்னிலை வகித்தார்.  
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்த ஆட்சியாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், மாநிலத் தலைவர் மீதான தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, பணி ஓய்வு ஆணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT