ஈரோடு

பள்ளி மாணவர்களின் ஜிம்னாஸ்டிக் தனித்திறன் கண்டறியும் முகாம்

ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டிற்கான தனித்திறன்

DIN

ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டிற்கான தனித்திறன் கண்டறிதல் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை30) காலை 10 மணிக்கு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 
இது குறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
10 முதல் 14 வயதுள்ள இருபால் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். உடல் தகுதியுடன் தனித்திறமையை வெளிப்படுத்தும் 10 ஆண்கள், 10 பெண்கள் என 20 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
20 பேருக்கும் 6 மாத கால சிறப்பு பயிற்சிக்கு பிறகு அரசு விளையாட்டு விடுதிகளில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் விருப்பமுள்ள மாணவ, மாணவியரை, பள்ளி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குள் ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT