ஈரோடு

தோல்வியால் துவண்டுவிடாமல் மக்கள் பணியாற்ற வேண்டும்: அமைச்சர் கே.சி.கருப்பணன்

DIN


மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் அதிமுகவினர் மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கேட்டுக் கொண்டார்.  
பவானி ஒன்றியத்தில் குருப்பநாயக்கன்பாளையம், வரதநல்லூர், மைலம்பாடி, சன்னியாசிபட்டி பகுதிகளில் அதிமுக நிர்வாகிகளுடன் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:
அதிமுக அரசின் சாதனைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் எடுத்துரைத்து உண்மை நிலையினை வாக்காளர்களிடம் உணரவைக்க வேண்டும். தோல்வி எப்போதும் நிரந்தரமானதல்ல. 
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டுவிடாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் வகையில் கட்சியினர் ஒருங்கிணைந்து, உற்சாகமாகப் பாடுபட வேண்டும் என்றார்.
திருப்பூர் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறியப்பட்டது. அதிமுக ஒன்றியச் செயலர் எஸ்.எம்.தங்கவேலு, பவானி நகரச் செயலர் என்.கிருஷ்ணராஜ், பாஜக மாவட்டப் பொதுச் செயலர் சித்திவிநாயகன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான், பவானி ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT