உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 102 கடைகளுடன் மட்டுமே மதுக் கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விளை நிலங்களில், டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இதன்படி தமிழகத்தில் உள்ள 110 கடைகளை அகற்ற நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, கந்தம்பாளையம், பங்களாபுதூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த மூன்று டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை முதல் மூடப்பட்டன.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:
ஊராட்சி புன்செய் நிலத்தில் கட்டட வரைபட அனுமதி கிடைக்காததால் மூன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் கடைகளின் எண்ணிக்கை 194 ஆக குறைந்துள்ளது என்றனர்.