ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக கோடை வெயில் வாட்டிய நிலையில் திங்கள்கிழமை மாலை 104 டிகிரியாக வெயில் பதிவானது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
இருப்பினும் பெரும்பாலான இடங்களில் தூரல் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெருந்துறையில் 6.4 மி.மீ., கோபி 6 மி.மீ., கவுந்தப்பாடி 5 மி.மீ., எலந்தகுட்டைமேடு 5 மி.மீ., ஈரோடு 4 மி.மீ., தாளவாடி 3 மி.மீ என மழை பதிவானது.
இதனால், செவ்வாய்க்கிழமை காலை குளிர்ந்த காற்று வீசியபோதிலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.