ஈரோடு

ரியல் எஸ்டேட் அதிபர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

DIN

ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது மேலும் ஒரு இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.
கல்லூரி மாணவி ஒருவர் ஏற்கனெவே பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன 26 வயது இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசனிடம் வியாழக்கிழமை புகார் மனு ஒன்றை அளித்தார்.  
அந்த மனு விவரம்: 
எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு திருமணம் ஆனது. எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். என் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் மதுக்கடைக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ராதாகிருஷ்ணன் என் கணவருக்கு மது வாங்கி கொடுத்து அவரிடம் பழகியுள்ளார்.  
இதன்மூலம் ராதாகிருஷ்ணனை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு என் கணவர், வீட்டிற்கு அழைத்து வந்தார். நண்பர் என கூறி பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு எனக்கும், எனது கணவருக்கும் இடையே  ராதாகிருஷ்ணன் பிரச்னையைத் தூண்டிவிட்டார்.
இதனால் அடிக்கடி எனது கணவருடன் தகராறு ஏற்பட்டதால் நான் தற்கொலைக்கு முயன்றேன். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது நலம் விசாரிக்க வந்த ராதாகிருஷ்ணன், என்னிடம் ஆறுதல் கூறி, குழந்தையிடம் ரூ. 2,000 கொடுத்தார்.
பின்னர் நான் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தேன். அப்போது ராதாகிருஷ்ணன் எனது கணவர் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்கு வந்து தொடர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT