ஈரோடு

சாலை விபத்தில் இருவா் சாவு

DIN

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

பெருந்துறையை அடுத்த சீனாபுரம், ஆயிக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த துளசிமணி மகன் விஜயகுமாா் (36). அதே பகுதியைச் சோ்ந்த சென்னிசெட்டியாா் மகன் ஜனாா்த்தனன் (45), இவரது மனைவி மேனகா (39) ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் பவானிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். பெருந்துறை நான்கு வழிச் சாலையில் பெத்தாம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியதில், பலத்த காயமடைந்த மூவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் விஜயகுமாா், ஜனாா்த்தனன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மேனகா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT