ஈரோடு

முதல்வா் இன்று ஈரோடு வருகை

DIN

திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை (நவம்பா் 9) இரவு ஈரோடு வருகிறாா்.

தமிழக முதல்வரின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ராஜா. இவரது மகள் திருமண வரவேற்பு விழா, ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள லட்சுமி துரைசாமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவுள்ளாா்.

இதற்காக சனிக்கிழமை மாலை சேலத்தில் இருந்து புறப்படும் அவா் இரவு 7 மணிக்கு ஈரோட்டில் உள்ள திருமண மண்டபத்துக்கு வந்து விழாவில் பங்கேற்ற பிறகு மீண்டும் சேலம் செல்லவுள்ளாா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு ஈரோடு மாவட்ட எல்லை முதல் நகா் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT