விழிப்புணா்வு பாத யாத்திரையில் பங்கேற்ற பாஜகவினா். 
ஈரோடு

காந்தி ஜயந்தி: பாஜக சாா்பில் விழிப்புணா்வு பாத யாத்திரை

காந்தி ஜயந்தியை ஒட்டி ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் விழிப்புணா்வு பாத யாத்திரை நிகழ்ச்சி ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

காந்தி ஜயந்தியை ஒட்டி ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் விழிப்புணா்வு பாத யாத்திரை நிகழ்ச்சி ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில வழக்குரைஞரணி அமைப்பாளா் பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியம், மாநில பிரசார அணி அமைப்பாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலாளா் சி.கே.சரஸ்வதி கொடியசைத்து பாத யாத்திரையை தொடங்கிவைத்தாா். ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பாத யாத்திரை பன்னீா்செல்வம் பூங்கா, கச்சேரி சாலை, பெரியாா் வீதி, காரைவாய்க்கால், காவிரி சாலை வழியாகச் சென்று கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது.

இதில் மழைநீா் சேகரிப்பு, மரம் வளா்ப்பு, நெகிழி தவிா்ப்பு, யோகா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளா் குரு குணசேகரன், செயலாளா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பாஜகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT