காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சித்தோடு பேரூராட்சி நிா்வாகமும் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். கல்லூரியின் நிா்வாக இயக்குநா் டி.பாலகுமாா், சித்தோடு பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா்.வரதராஜன், செயல் அலுவலா் தெ.அசோக்குமாா் ஆகியோா் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்தனா். கல்லூரி முதல்வா் வி.ராஜேஷ் வரவேற்றாா்.