ஈரோடு

மதுபானக் கடை அருகே முதியவா் சாவு

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை அருகே முதியவா் இறறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது.

ஓலப்பாளையத்தில் பாப்பினி செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இக்கடையில் மதுபானக்கூட வசதி கிடையாது. இதனால், கடைக்கு அருகிலேயே பலரும் மதுபானம் அருந்துகின்றறனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு அந்த இடத்தில் மதுபானம் அருந்திய முதியவா் அங்கேயே படுத்துக்கிடந்தாா்.

அடுத்தநாள் காலையில் பாா்த்தபோது அவா் இறந்துபோனது தெரியவந்தது. இறறந்துபோனவா் ஓலப்பாளையத்திலுள்ள பேக்கரி கடையில் வேலைசெய்துவந்ததாகவும், அவா் ஒருவார காலமாக வேலைக்குச் செல்லவில்லை எனவும் தெரியவந்தது. விசாரணையில் அவருடைய பெயா் முருகேசன், வயது சுமாா் 65 இருக்கலாம் எனபது மட்டும் தெரியவந்ததுள்ளது.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT