ஈரோடு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ஆய்வு

DIN

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுப் பேரவைக் கூட்டம் அதன் தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றுப் பேசினார். 
அதன் பிறகு அவர் செய்தியார்களுக்கு அளித்த பேட்டி:
ஒவ்வோர் துறையிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.  ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனில் 99.75 சதவீத கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். பவானிசாகர் அணைக்கு கீழ் பவானி ஆற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால் 5 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். அவினாசி - அத்திக்கடவு திட்டம் 100 சதவீதம் மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT