ஈரோடு

இரு பேருந்துகள் மோதல்: 7 பயணிகள் பலத்த காயம்

DIN


மொடக்குறிச்சியை அடுத்த கருமாண்டம்பாளையம் பகுதியில் அரசு, தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
மொடக்குறிச்சியை அடுத்த கருமாண்டம்பாளையம் பகுதியில் ஈரோட்டிலிருந்து பள்ளபட்டி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது, அப்பகுதி வளைவாக இருந்ததால், எதிர்பாராத விதமாக இரு பேருந்துகளும் மோதி விபத்து ஏற்பட்டது. 
இதில், இரு பேருந்துகளிலும் இருந்த 7 பயணிகள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து குறித்து மலையம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT