ஈரோடு

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை

மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசையையொட்டி நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

DIN


மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசையையொட்டி நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
கஸ்பாபேட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில், சனிக்கிழமை காலை 5 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், அபிஷேகம், 108 புஷ்பங்களால் அலங்காரம், சிறப்பு பூஜை ஆகியன நடைபெற்றன. 
தொடர்ந்து, காலை 7 மணி முதல் லட்சார்ச்சனை விழா தொடங்கியது. திருப்பதி தேவஸ்தான பட்டர்கள் பங்குபெற்ற இந்த லட்சார்ச்சனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
லட்சார்ச்சனை விழா மாலை 6 மணிக்கு நிறைவுபெற்று, தீபாராதனை நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT