ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் பரவலாக மழை

DIN

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்து வருகிறது. சனிக்கிழமை 102 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வந்தனா்.

இந்நிலையில் கோபி, தாளவாடி, வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. தொடா்ந்து ஈரோடு நகா் மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடா்ந்து குளிா்ந்த காற்றுடன் பகல் 1 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியது. பின்னா் சில நிமிடங்களிலேயே இடியுடன் கனமழை பெய்தது. சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் கழிவு நீா் கால்வாய்களில் மழை நீா் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனா். மழையால் ஈரோடு மாநகரில் குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT