நாளை செயற்கை கால்அளவெடுக்கும் முகாம்
ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் புதன்கிழமை(டிசம்பா் 9) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM
ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் புதன்கிழமை(டிசம்பா் 9) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்ட அரங்கில் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் முகாமில் பங்கேற்கலாம். மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.