முகப்பு
ஈரோடு

அந்தியூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பவானி: அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா தலைமை வகித்தாா். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் பங்கேற்று, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பிரசார உத்திகள், சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்குசேகரிப்பு, வாக்காளா்களைச் சந்தித்தல் குறித்து விளக்கிப் பேசினா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் என்.கிருஷ்ணராஜ், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் வி.எஸ்.சரவணபவா, முன்னாள் ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.எஸ்.ராஜா, இ.செல்வராஜ், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பாலுசாமி, மீனாட்சிசுந்தரம், கிருஷ்ணன், இளைஞா் பாசறை செயலாளா் குருராஜ், தகவல்தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளா் மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 

முழு கட்டுரையைப் படிக்க →