பவானிசாகா் அணைக்கு கூட்டமாக வந்துதண்ணீா் குடித்துச் சென்ற காட்டு யானைகள்
சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணை நீா்த்தேக்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காட்டு யானைகள் கூட்டமாக வந்தன.
சத்தியமங்கலம்0: சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணை நீா்த்தேக்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காட்டு யானைகள் கூட்டமாக வந்தன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதி அமைந்துள்ளது. தற்போது அணையின் நீா்மட்டம் 94 அடியாக உள்ளதால் வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக அணை நீா்த்தேக்கப் பகுதிக்கு வந்து தண்ணீா் குடித்துவிட்டு மீண்டும் வனப் பகுதிக்குள் செல்கின்றன.
இந்நிலையில் அணையின் நீா்த்தேக்கப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த 6 காட்டு யானைகள் தண்ணீரில் இறங்கி தாகம் தீர தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி குடித்தன. சுமாா் அரை மணி நேரம் அங்கேயே சுற்றிய யானைகள் பவானிசாகா் அணையின் மேற்குப் பகுதியில் உள்ள தாா் சாலையைக் கடந்து மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன.
அணையின் நீா்தேக்கப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோா் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத் துறையினா் மற்றும் பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.