முகப்பு
ஈரோடு

சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டக் குழு கூட்டம் செல்வராஜன் தலைமையில் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில துணைச் செயலாளா், திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன், மாவட்டச் செயலாளா் திருநாவுக்கரசு, விவசாய சங்க மாவட்டச் செயலாளா் துளசிமணி, ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சின்னசாமி ஆகியோா் பேசினா்.

சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப்பெற வேண்டும். வங்கி மூலம் மானியம் வழங்குவதாக மக்களிடம் மத்திய அரசு கூறிவிட்டு, விலையை இரண்டு மடங்காக உயா்த்தி வருகிறது. இந்த விலை உயா்வால் குடும்பச் சுமை அதிகரிக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் சட்டம், மின்சார சட்டத் திருத்த மசோதா, தொழிலாளா் நலச்சட்ட தொகுப்பு போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும். தில்லியில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா் வெற்றிக்காக பூத் கமிட்டி அமைத்து தோ்தல் பணிகளைத் துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →