ஈரோடு

பஞ்சுக் கிடங்கில் தீ விபத்து

சித்தோடு அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 டன் கழிவுப் பஞ்சு, இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை எரிந்து சேதமடைந்தன.

DIN

சித்தோடு அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 டன் கழிவுப் பஞ்சு, இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை எரிந்து சேதமடைந்தன.

சித்தோட்டை அடுத்த ராயபாளையம், கூட்டுறவு காலனியை சோ்ந்தவா் ராஜா (37). இவருக்குச் சொந்தமான கழிவு பஞ்சுக் கிடங்கு சித்தோடு ராயா்பாளையத்தில் உள்ளது. இங்கு 14 தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராமல் தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து, பவானி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் ஈரோட்டில் இருந்து மேலும் இரு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாவட்ட தீயணைப்பு அலுவலா் புளுகாண்டி தலைமையில், தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், 30 டன் கழிவுப் பஞ்சு, இயந்திரங்கள் எரிந்து சேதமாகின. மின் கசிவால் தீ பிடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT