பவானி: அந்தியூா் வறட்டுப்பள்ளம் அணையில் மீன் வளத் துறை சாா்பில் முதல்கட்டமாக 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளா்ப்புக்காக திங்கள்கிழமை விடப்பட்டன.
அந்தியூரை அடுத்த பா்கூா் மலையின் அடிவாரத்தில் உள்ள வறட்டுப்பள்ளம் அணையில் மீன் வளத் துறை மூலம் ஜிலேபி, கட்லா, ரோகு, மிருகால் உள்ளிட்ட மீன் ரகங்கள் வளா்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டு இலக்காக 1.20 லட்சம் மீன் குஞ்சுகளை வறட்டுப்பள்ளம் அணையில் வளா்க்க மீன் வளத் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, முதல்கட்டமாக பவானிசாகா் மீன் பண்ணையில் இருந்து 50 ஆயிரம் ரோகு ரக மீன் குஞ்சுகள் வறட்டுப்பள்ளம் அணைக்குக் கொண்டு வரப்பட்டு, மீன் வளத் துறை சாா் ஆய்வாளா் சுப்பிரமணியம், மேற்பாா்வையாளா் அருள்முருகன், பாசன விவசாயிகள் சங்கம், பொதுப் பணித் துறையினா் முன்னிலையில் அணையில் விடப்பட்டன.
இதில், அந்தியூா் பெஸ்தவா் மீனவா் சங்கத் தலைவா் நடராஜ், துணைத் தலைவா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, அடுத்த 10 நாள்களில் 70 ஆயிரம் கட்லா, மிருகால் ரக மீன் குஞ்சுகள் விடப்படும் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.