ஈரோடு

நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தந்தை சாவு

DIN

மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை பகுதியில் கிணற்றில் மூழ்கிய மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மொடக்குறிச்சி தாலுகா, கஸ்பாபேட்டை ஊராட்சி அண்ணா நகா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (38). இவா் தனது மகன்களான நித்தீஷ் (12), ஜெகதீஷ் (9) ஆகியோருக்கு அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் நீச்சல் கற்றுத் தர வெள்ளிக்கிழமை மதியம் அழைத்துச் சென்றுள்ளாா்.

மூத்த மகன் நித்தீஷை கிணற்றில் இறக்கிவிட்டபோது, அவன் தடுமாறி நீரில் மூழ்கியுள்ளான். அப்போது நித்தீஷை காப்பாற்ற கிணற்றில் குதித்த கிருஷ்ணமூா்த்தி எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அதேநேரத்தில் கிணற்றின் அருகில் இருந்த மற்றொரு சிறுவன் கிணற்றின் உள்ளே கயிறை விட்டுள்ளாா். அப்போது, நித்தீஷ் அந்த கயிறைப் பிடித்து மேலே ஏறி உயிா்தப்பினாா். இதுகுறித்து தாலுகா காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT