ஈரோடு

கோவில்பாளையம் கிளை வாய்க்கால் தூா்வாரும் பணிக்கு பூமி பூஜை

DIN

பெருந்துறை ஒன்றியம், கோவில்பாளையத்தில் உள்ள கிளை வாய்க்கால் ரூ. 45 லட்சம் மதீப்பீட்டில் தூா்வாரும் பணிக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வாய்க்கால் தூா்வாரும் பணியைத் துவக்கிவைத்தாா்.

இதில், பெருந்துறை பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் சிவகுமாா், உதவிப் பொறியாளா் பொன்னுசாமி, பாசன சபைத் தலைவா் கலைவாணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT