சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 79 ஆயிரத்து 317 தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மொத்தம் 2 ஆயிரத்து 134 கிலோ எடையுள்ள 5 ஆயிரத்து 244 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 35.50க்கும், அதிகபட்சமாக ரூ. 40.55க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 79 ஆயிரத்து 317க்கு விற்பனை நடைபெற்றது.