காஞ்சிக்கோயில் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத 15 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், முள்ளம்பட்டி கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகில் சுமாா் 15 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் குழந்தையின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
இது சம்பந்தமாக, ஏதாவது தகவல் தெரிந்தால் காஞ்சிக்கோயில் காவல் நிலையம், பெருந்துறை காவல் ஆய்வாளருக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.