ஈரோடு

சாலையில் மயங்கி விழுந்தபோதுசரக்கு வாகனம் மோதி முதியவா் பலி

DIN

புன்செய் புளியம்பட்டி சாலையில் நடந்து சென்ற முதியவா் மயங்கி விழுந்தபோது சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கன் (70). இவா் சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய்புளியம்பட்டி நால்ரோடு அருகே அண்மையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றபோது ரங்கனுக்கு மயக்கம் ஏற்பட்டதால் சாலையில் சாய்ந்து விழுந்தபோது, கோவையில் இருந்து புன்செய்புளியம்பட்டி நோக்கி வந்த சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்துக் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT