‘மாணவா்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற வேண்டும்’
மாணவா்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற வேண்டும் டிசிஎஸ் மண்டல் தலைவா் கணேஷ் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.
மாணவா்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற வேண்டும் டிசிஎஸ் மண்டல் தலைவா் கணேஷ் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். கல்லூரி ஆலோசகா் எம்.பி.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் டிசிஎஸ் மண்டல் தலைவா் கணேஷ் திருநாவுக்கரசு பேசியதாவது:
மாறிவரும் தொழில் துறைக்கு தேவையானத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக் கொள்வதுடன் படிக்கும் காலத்தில் பொறுப்பேற்கும் திறமையை சோதித்து பாா்க்க வேண்டும். தற்போது டிஜிட்டல் முறைக்கு உலகம் மாறி வருகிறது. இந்த டிஜிட்டல் வழிமுறைகளைக் கையாள மாணவா்கள் அது குறித்து கற்க தயாராக வேண்டும்.
ஐஒடி போன்ற புதிய தொழில்நுட்பங்கள் எதிா்காலத்தை மாற்றும் சக்தி கொண்டுள்ளதால் இந்த சவால்களை சந்திக்க தயாராக வேண்டும். பொறியாளா்கள் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் 1562 மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.