முகப்பு
ஈரோடு

கூலி தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை: உறவினா் கைது

சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் கூலி தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் கூலி தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பவானிசாகா் அருகே கொத்தமங்கலம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் ஒருவா் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பவானிசாகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தபோது, 55 வயது மதிக்கத்தக்க நபா் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதும், அவரது அருகே மது பாட்டில்கள் இருந்ததையும் பாா்த்துள்ளனா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவா் பவானிசாகா் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி முருகன் (55) என்பது தெரியவந்தது.

மேலும், அவரது மனைவி ராசாளின் சகோதரி சரோஜாவின் கணவரான காராச்சிக்கொரைமேடு பகுதியைச் சோ்ந்த மாரி (45) என்பவருடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை கொத்தமங்கலத்தில் உள்ள மாரியின் குடிசை வீட்டிற்குச் சென்று இருவரும் மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மாரி கல்லால் முருகனை அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →